Wedding general purpose songs

7.1 'Sri raamaa jeya jeya'

ஸ்ரீராமா ஜெய ஜெய 
    ஸ்ரீராமா ஜெய ஜெய
    சீதம்மா மனோகர
    காருண்ய ஜலதே
    கருணாநிதே ஜெய ஜெய

    தில்லையில் வனம் தனிலே
    ராமர் வந்த நாளையிலே
    ராமரோட சேனையெல்லாம்
    ராமரை கொண்டாட

    சங்கு சக்ரம் தரித்து கொண்டு
    தனுசைக் கையில் பிடித்துக் கொண்டு
    கோதண்டம் தனைப் பிடித்து ராமர்
    கோலாகலமாய் இருந்தார்

    ஜனகரோட மனையில் வந்து
    சீதையுடைய வில்லை முறித்து
    ஜானகியை மாலையிட்டார்
    ஜனகர் அரண்மனைதனிலே

    ஸ்ரீராமா ஜெய ஜெய
    சீதம்மா மனோகர
    காருண்ய ஜலதே
    கருணாநிதே ஜெய ஜெய 
7.2 'manmadhanukku maalai ittaayE' 
மன்மதனுக்கு மாலையிட்டாயே 
    மன்மதனுக்கு மாலையிட்டாயே
    மாதே மன்மதனுக்கு மாலையிட்டாயே
    அடி மாதே மன்மதனுக்கு மாலையிட்டாயே
    ஜன்மம் அதில் சுகித்து நீராடி - மன்மதனுக்கு

    மன்மதனுக்கு மாலையிட்டு
    மாலைதனை கைபிடித்து
    கனகநோன்பு நோற்றதுபோல்
    கிடைத்தது பாக்யமடி - மன்மதனுக்கு

    செந்தாழை ஓடையிலே
    மந்தாரை பூத்ததுபோல்
    இந்திரனோ சந்திரனோ
    சுந்தரனோ இவர்தானடி - மன்மதனுக்கு

No comments:

Post a Comment