bOjanam seyya vaarungO

போஜனம் செய்ய வாருங்கோ
    போஜனம் செய்ய வாருங்கோ ராஜ
    போஜனம் செய்ய வாருங்கோ

    மீனாக்ஷி சுந்த்ரேச கல்யாண மண்டபத்தில்
    போஜனம் செய்ய வாருங்கோ

    சித்ரமான நவ சித்ரமான்
    கல்யாண மண்டபத்தில்
    வித விதமாகவே வாழைகள் கட்டி
    வெட்டி வேர் கொழுந்து தோரணங்களும்
    மாட்டிய கூடமும் பவள ஸ்தம்பமும்
    பச்சை மரகதங்கள் தளகதி செய்களும்
    முத்து முத்தாகவே நுனி வாழைகளும்
    பசும்பொன்னால் செய்த பஞ்ச பாத்ரங்களும்
    பன்னீர் ஜலத்துடன் உத்திரணியுமே
    முத்து முத்தாகவே முன்னே தெளிக்க - போஜனம்

    மும்மூர்த்தி சகல தேவர்களும் கூட
    அன்னம்பார்வதி ஆதிபராசக்தி
    அருந்ததி இந்த்ராணி அகல்யா கெளசல்யா
    த்ரெளபதி சீதா தாரா மண்டோதரி
    இந்திரதேவி ரம்பை திலோத்தமை
    கந்தர்வ பத்தினி கின்னர தேவி
    அஷ்டதிக் பாலர்கள் பார்யாளுடனே
    சத்வ மஹாமுனி ரிஷிபத்னிகளும்
    பந்தடித்தாற் போல் பட்டுகள் கட்டி
    கெஜ்ஜை மெட்டுகள் கல்லு கல்லுவென
    பசும்பொன் தட்டிலே பாயசங்கள் எடுத்து
    பரிந்து பரிந்து பரிமாரிட வந்தார் - போஜனம் 

No comments:

Post a Comment