nalangu' songs

5.1 nalangkita vaarum raajaa 
நலங்கிட வாரும் ராஜா 
    நலங்கிட வாரும் ராஜா நாணயம் உள்ள துரையே
    முத்திழைத்த பந்தலிலே ரத்ன கோபமாட்டிருக்கு
    வந்த ஜனம் காத்திருக்க வாரும் அய்யா நலங்கிடவே - நலங்கிட

    பட்டு ஜாம காளமெத்தை பந்தலிலே விரித்திருக்கு
    நாலு விதவாத்யங்களும் நாகரிகமாய் ஒலிக்க - நலங்கிட

    எந்த ஊரு எந்த தேசம் எங்கிருந்து இங்கு வந்தீர்
    மோகன புரம் தனிலே மோகினியைக் காண வந்தேன் - நலங்கிட 
5.2 'nalangidugiraaL meenalocahni' - another nalangu song ! 

நலங்கிடுகிறாள் மீனலோசனி 
    நலங்கிடுகிறாள் மீனலோசனி
    நாதருடன் கூடி
    நலங்கிடுகிறாள் மீனலோசனி

    நாரதரும் வந்து கானங்களை பாட
    நானாவித தாளங்கள் போட - நலங்கிடுகிறாள்

    சொர்ண தாம்பாளத்தை ஜோதியால் எடுத்து
    சுந்தரேசர் கையில் கொடுத்து
    பூபதி பாதத்தில் விழுந்து
    புஷ்ப மாலைகளை அன்புடன் சார்த்தி - நலங்கிடுகிறாள்

    சொர்ண பன்னீர் சொம்பை ஜோதியால் எடுத்தாள்
    சுந்தரேசர் மேலே தெளித்தாள்
    வாசனை கந்தம் பரிமளம் பூசினாள்
    வணங்கி சாமரம் வீசினாள் - நலங்கிடுகிறாள் 

No comments:

Post a Comment